News January 28, 2026
திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் திருநங்கையர் தினத்தை முன்னிட்டு (ஏப்.15, 2026) தகுதியுள்ள திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. ரூ.1,00,000 காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் (பிப்.28) என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://awards.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 31, 2026
திருவாரூர்: ராணுவத்தில் வேலை- APPLY NOW

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 31, 2026
திருவாரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

‘திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை திறன் குறைபாடுடையவர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆகியோர் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ள, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக, இலவச பேருந்து பயண அட்டையினை விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2412590 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’ என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News January 31, 2026
திருவாரூர்: பொய் புகார் கொடுத்த பெண் கைது

திருவாரூர் மாவட்டம், இரவாஞ்சேரியை சேர்ந்தவர் ஹமீதாபைரோஸ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தன்னிடம் இருந்து 25 பவுன் தங்க நகைகளை மர்ம நபர் ஒருவர் வழிப்பறி செய்ததாக இரவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், உறவினர்களிடம் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க மனமில்லாமல் ஹமீதா பொய் புகார் அளித்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.


