News January 21, 2026

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணும் நோக்கில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மன்னார்குடி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் ஜன.23-ம் தேதி காலை 11 மணிக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியரகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 2, 2026

திருவாரூர்: சிறையில் கைதி திடீர் உயிரிழப்பு

image

மன்னார்குடி அடுத்த வடுவூரை சேர்ந்தவர் உலகநீதி (58). இவர் வடுவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 2021-ம் ஆண்டு முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவருக்கு சிறுநீரக பாதிப்பு காரணமாக கடந்த 20-ம் தேதி முதல் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News February 2, 2026

திருவாரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டம் முழுவதும் தாயுமானவர் திட்டம் மூலம் மூத்த குடிமக்களுக்கான குடிமைப் பொருட்கள் கொடுப்பதற்கான திட்ட தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.‌ அதன்படி இன்று (பிப்.2) மற்றும் நாளை ஆகிய நாட்களில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு ரேஷன் கடைகள் மூலம் இல்லங்களுக்கு சென்று குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

News February 2, 2026

திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (பிப் 1) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.2) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!