News December 25, 2025
திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்புக் குறைதீர்க்கும் கூட்டம், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்தில், வருகின்ற 29.12.2025 பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் அளித்திடலாம், அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 25, 2025
திருவாரூர் மாவட்டம் உருவான கதை

தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, 01.01.1997 முதன் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து 9 ஒன்றியங்களும், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 1 ஒன்றியத்தையும் சேர்த்து திருவாரூரைத் தலைமையிடமாகக் கொண்டு திருவாரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் 2 வருவாய்க்கோட்டங்களையும், 9 வருவாய் வட்டங்களையும், 10 ஒன்றியங்களையும், 573 வருவாய்க் கிராமங்களையும் கொண்டுள்ளது. SHARE IT NOW
News December 25, 2025
திருவாரூர் மாவட்ட தீயணைப்பு நிலைய தொடர்பு எண்கள்

1. திருவாரூர் – 04366-242101
2. குடவாசல் – 04366-262101
3. திருத்துறைப்பூண்டி – 04369-222401
4. மன்னார்குடி – 04367-222299
5. நீடாமங்கலம் – 04367-260401
6. நன்னிலம் – 04366-229101
7. முத்துப்பேட்டை – 04369-260101
8. வலங்கைமான் – 04374-264101
9. கூத்தாநல்லூர் – 04367-235101
10. திருமக்கோட்டை – 04367-272034
11. கோட்டூர் – 04367-279455
12. பேரளம் – 04366-23910
இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News December 25, 2025
திருவாரூர்: 49 பேருக்கு ரூ.1½ லட்சம் உதவி!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடந்தது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு 49 பேருக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 825 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


