News October 29, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அக்டோபர் மாதத்திற்கான திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், எதிர்வரும் அக்.30 அன்று மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். எனவே விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது கருத்துக்களை தெரிவிக்குமாறு திருவாரூர் ஆட்சியர் மோகச்சந்திரன் அறிவித்துள்ளார்.
Similar News
News October 29, 2025
மன்னார்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், துளசேந்திரபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் கொள்முதல் பணிகள் மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் பாதுகாப்பு முறைகள் குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
News October 29, 2025
திருவாரூர்: மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் தலைமையில், நேற்று மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து உட்கோட்ட மற்றும் சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் இதில், சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
News October 29, 2025
திருவாரூர்: 12th போதும் ரயில்வே வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…


