News October 15, 2024
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவசர எண் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதை முன்னிட்டு அவசர எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து தகவல்கள் 24 மணி நேரமும் செயல்படும் திருவாரூர் மாவட்ட கட்டுப்பாடு அறை எண் 1077 என்ற எண்ணிலும் அல்லது 04366 226623 என்ற எண்ணிலும் தகவல்கள் தெரிவிக்கலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
Similar News
News September 14, 2025
திருவாரூர்: உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ??

திருவாரூர் மக்களே, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால், மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். <
News September 14, 2025
திருவாரூர்: சிறப்பு கல்வி கடன் முகாம் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு முடித்தும், உயர்கல்வி பயில நிதியின்றி தவிக்கும் மாணவர்களுக்கென சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வரும் செப்.17 (புதன்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறும் முகாமில், மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி கட்டண விவரம், ஆதார் மற்றும் பான் கார்டுடன் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர்
News September 14, 2025
திருவாரூர்: 16 வயது சிறுமி கர்ப்பம்; பாய்ந்த போக்சோ

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ் (32). இவர் 16 வயதுடைய சிறுமி ஒருவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி, கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த வலங்கைமான் ஊர்நல அலுவலர் கலைவாணி நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் அருள்தாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.