News December 8, 2025
திருவாரூர்: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன் உதவி

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் tabcedco.net என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
Similar News
News December 10, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கொடுத்த அறிவிப்பு

சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது குடியரசு தின விழாவில் வழங்க விண்ணப்பிக்கும் முறை ஆட்சியர் அலுவலகம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டடப் பகுதியில் டிசம்பர் 15 அன்று விண்ணப்பிக் கடைசி நாள் எனவும் https://award.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News December 10, 2025
திருவாரூர்: ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் டிட்டோ ஜாக் சார்பில் வருகின்ற டிச.12-ம் தேதி அன்று முழு வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி நடைபெறும் இப்போராட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் திருவாரூர் மாவட்ட ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் முழுமையாக பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
News December 10, 2025
திருவாரூர்: வாக்காளர் பட்டியல்-ஆட்சியர் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும்; பெயர் சேர்த்தல் படிவம் 6 உதவி சேவை மையங்களிலும் வரும் டிச.11-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் தகுதி உடைய நபர்கள் படிவம் 6-ல் விண்ணப்பித்து பெயரினை சேர்த்து பயனடையுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.


