News January 15, 2026
திருவாரூர்: மயங்கி கிடந்த மூதாட்டி சாவு

கள்ளிக்குடியில் கிழக்கு கடற்கரை சாலையில் 65 மதிக்கதக்க மூதாட்டி மயங்கி கிடப்பதாக எடையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் மூதாட்டியை மீட்டு, திருத்துறைப்பூண்டி மருத்துவமனைக்கு அனுமதித்தனர். பின்னர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News February 4, 2026
திருவாரூர்: சிலிண்டர் வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்!

திருவாரூர் மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!
News February 4, 2026
திருவாரூர்: இனி வீட்டிலிருந்தே வரி செலுத்தலாம்!

திருவாரூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம்.<
News February 4, 2026
திருவாரூர் கலெக்டரின் முக்கிய அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை பணியில் அமர்த்தும் தனியார் நிறுவனங்களுக்கு மானிய தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணியமர்த்தப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2000 வீதம் வருடத்திற்கு ரூ.24,000 ஊதிய மானியமாக வழங்கப்படும் எனவும் https://forms.gle/kpThjwGTCKVGiyfw என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியரகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


