News January 12, 2026
திருவாரூர்: மதுவில் விஷம் கலந்து குடித்தவர் மரணம்

திருவாரூர், ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் சரவணன் (42). இவர் திருமணம் ஆகாத விரக்தியில் கடந்த மாதம் 26-ம் தேதி விஷத்தை மதுவில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த அவர், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 23, 2026
திருவாரூர் தேரை ஆழித்தேர் என்று அழைப்பது ஏன்?

ஆழி என்றால் பரந்து விரிந்த என்று பொருள். அதனால் தான், எந்தவிதமான நவீன இயந்திர வசதிகளும் இல்லாத பழங்காலத்தில் மனித உழைப்பினால் மட்டும் பரந்து விரிந்த பிரமாண்டமாக செய்யப்பட்ட தேரான திருவாரூர் தேரை ஆழித்தேர் என அழைக்கின்றனர். 1400 ஆண்டுகளுக்கு முன்பே “ஆழித்தேர் வித்தகனை நான்கண்ட தாரூரே” என்று திருநாவுக்கரசர் தேவாரத்தில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்ங்க…
News January 23, 2026
திருவாரூர்: ரூ.35,000 சம்பளத்தில் இந்தியன் வங்கியில் வேலை!

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd -இல், தற்போது Relationship Manager, Digital Marketing Specialist உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.25ம் தேதிக்குள் இந்த<
News January 23, 2026
திருவாரூர்: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

திருவாரூர் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <


