News January 12, 2026
திருவாரூர் மக்களே உங்களுக்கு தெரியுமா?

திருவாரூர், தியாகராஜ சுவாமியின் பாதங்களை ஆண்டிற்கு 2 முறை மட்டுமே தரிசிக்க முடியும். பங்குனி உத்திரத்தின் போது இடது பாதத்தையும், திருவாதிரையின் போது வலது பாதத்தையும் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் தியாகராஜரின் பாதங்கள் மலர்களால் மூடப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கான காரணம் தெரியாததால் திருவாரூர் ரகசியங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. உங்களுக்குத் தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க..SHARE IT.
Similar News
News February 2, 2026
திருவாரூர்: சிறையில் கைதி திடீர் உயிரிழப்பு

மன்னார்குடி அடுத்த வடுவூரை சேர்ந்தவர் உலகநீதி (58). இவர் வடுவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 2021-ம் ஆண்டு முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவருக்கு சிறுநீரக பாதிப்பு காரணமாக கடந்த 20-ம் தேதி முதல் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News February 2, 2026
திருவாரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருவாரூர் மாவட்டம் முழுவதும் தாயுமானவர் திட்டம் மூலம் மூத்த குடிமக்களுக்கான குடிமைப் பொருட்கள் கொடுப்பதற்கான திட்ட தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (பிப்.2) மற்றும் நாளை ஆகிய நாட்களில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு ரேஷன் கடைகள் மூலம் இல்லங்களுக்கு சென்று குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
News February 2, 2026
திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (பிப் 1) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.2) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


