News December 12, 2025

திருவாரூர்: மகளிர் உரிமைத்தொகை வழங்கும் விழா

image

திருவாரூர் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பயன்பெறும் இரண்டாம் கட்ட விரிவாக்கம், இன்று (டிச.12) பவித்திரமாணிக்கம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாலை 3 மணி அளவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க இருப்பதாக, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 14, 2025

திருவாரூர்: வேளாண் அலுவலகம் முற்றுகை அறிவிப்பு

image

மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பாரபட்சம் என்று முழுமையாக நிவாரணம் வழங்கிட கோரி வேளாண்மை துறை அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்த இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

News December 14, 2025

திருவாரூர்: அரசு பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு…

image

திருவாரூர் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள், தங்களது புகார்களை தெரிவிக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் ‘1800 599 1500’ என்ற கட்டணமில்லா புகார் எண்ணை அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகளை ஏற்ற மறுப்பது, பேருந்து நிறுத்தத்தில் பஸ் நிற்காமல் செல்வது, தாமதமாக வருவது, சில்லறை பிரச்சனை, ஓட்டுநர் அல்லது நடத்துநரின் தவறான நடத்தை போன்ற புகார்களை பயணிகள் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News December 14, 2025

திருவாரூர்: 1297 வழக்குகளுக்கு தீர்வு

image

திருவாரூர் மாவட்ட சட்ட பணிகள் குழு சார்பில் நேற்று லோக் அதாலத் நடைபெற்றது. இதில் முதன்மை மாவட்ட நீதிபதி செல்வமுத்துக்குமாரி தலைமை வகித்தார். மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் 3,102 வழக்குகள் எடுக்கப்பட்டு 1,297 வழக்குகளில் ரூ 3 கோடியே 78 லட்சத்து 55 ஆயிரத்து 648 மதிப்பிற்கு சமரச தீர்வு ஏற்பட்டது. இதில் நீதிபதிகள் சரத்ராஜ், லதா, முருகன், மாணிக்கம் முகமதுபசில், லிஷி ஆகியோர் கலந்து கொண்டனர்

error: Content is protected !!