News December 19, 2025
திருவாரூர்: பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை!

திருவாரூரில் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி வீட்டிலிருந்து பள்ளிக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளார். அதே பேருந்தில் மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி பகுதியைச் சேர்ந்த கொத்தனாராக வேலை செய்து வரும் ஸ்ரீதர் (44) என்பவரும் பயணம் செய்துள்ளார். அப்போது பேருந்தில் அந்த மாணவிக்கு ஸ்ரீதர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவி அளித்த புகாரின் பேரில் ஸ்ரீதரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 28, 2025
திருவாரூர் மாவட்டத்தில் உணவு கண்காட்சி

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பேரளம் பகுதியில் சோழநாடு உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் இயற்கை விவசாயிகளின் பொங்கல் திருவிழா மற்றும் உணவு கண்காட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜனவரி 4 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பேரளம் ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயற்கை வேளாண் பொருட்களின் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 28, 2025
திருவாரூர்: SBI வங்கியில் வேலை அறிவிப்பு!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: ரூ.6.20 லட்சம் (ஆண்டுக்கு)
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 05.01.2026
7.மேலும் தகவலுக்கு: C<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 28, 2025
திருவாரூர்: அரசு அலுவலர்கள் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், 2026 தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற்பார்வை அலுவலர், ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் ஆனந்த், திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மோகனசுந்தரம் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.


