News December 15, 2025
திருவாரூர்: பெற்றோர் திட்டியதால் இளைஞர் தற்கொலை

கொரடாச்சேரி அருகே மேலராதாநல்லூரைச் சேர்ந்தவர் அஜித் (21). இவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்ததனால் மன வேதனை அடைந்த அஜித் சம்பவத்தன்று விஷம் குடித்து கண்கொடுத்தவனிதம் பாலம் அருகே மயங்கி கிடந்துள்ளார். இதனை அந்த அஜித்தின் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஜித் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Similar News
News December 17, 2025
திருவாரூர்: கரண்ட் இல்லையா? கவலை வேண்டாம்!

திருவாரூர் மக்களே உங்கள் வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியம் இனி இல்லை. தற்போது,பொதுமக்கள் 94987 94987 என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News December 17, 2025
திருவாரூர்: விவசாய கூலித்தொழிலாளி தற்கொலை

முத்துப்பேட்டை, மேலநம்மங்குறிச்சியைச் சேர்ந்தவர் காசிநாதன் (50). விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கு சமீபகாலமாக தீராத வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த காசிநாதன் சம்பவத்தன்று வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து அவரது மகன் அய்யாதுரை முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பந்திது, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 17, 2025
திருவாரூர்: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது <


