News December 17, 2025

திருவாரூர்: நீரில் மூழ்கி மீனவர் பலி!

image

முத்துப்பேட்டை கற்பகநாதர்குளம் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ரவி(58). இவர் நேற்று வளவனாற்றின் கடல் முகத்துவாரம் அருகே வலைவிரித்து மீன் பிடித்துள்ளார். அப்போது, திடீரென்று நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற முத்துப்பேட்டை போலீசார் நீரில் மூழ்கி பலியான மீனவர் ரவியின் உடலை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News December 19, 2025

திருவாரூர்: ரூ.64,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

பேங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் காலியாக உள்ள Credit Officers பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 514
3. வயது: 25-40
4. சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 05.01.2026
7. மேலும் அறிந்துகொள்ள: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க…

News December 19, 2025

திருவாரூர்: மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

திருவாரூர், துர்க்காலயா சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் இன்று (டிச.19) மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் காலை 10 மணி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல ஒன்றியங்களில் உள்ள மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு அவர்கள் குறை, நிறைகளை பற்றிய கருத்தரங்கம் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 19, 2025

திருவாரூர்: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் வேண்டுமா?

image

திருவாரூர் மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.

error: Content is protected !!