News March 23, 2024
திருவாரூர்: தொழுகைக்காக சிறப்பு அரங்கம்

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் I.N.D.I.A கூட்டணி சார்பில் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது. அமைச்சர்கள், மாவட்ட செயலாளர், திமுக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அந்த பொதுக்கூட்ட மேடையின் அருகில் இஸ்லாமியர்கள் தொழுகைக்காக சிறப்பு அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது.
Similar News
News December 11, 2025
திருவாரூர்: மன்னார்குடி-சென்னை வந்தே பாரத் ரயில் இயக்க மனு

தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி இன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து தொகுதி தொடர்பான ரயில்வே கோரிக்கைகளை வழங்கினார். மன்னார்குடி-சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும். ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் நீடாமங்கலத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மன்னார்குடி-பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு வழங்கினார்.
News December 11, 2025
திருவாரூர்: BE படித்தவர்களுக்கு அரசு வேலை

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள திட்ட பொறியாளர், டெக்னிக்கல் நிபுணர் உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 33 (அதிகபட்சம்)
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.55.000
5. கல்வித்தகுதி: BE
6. நேர்காணல் நடைபெறும் நாள்: 16.12.2025
7. மேலும் தகவலுக்கு: <
மற்றவர்களும் பயன்பெற இதனை ஷேர் பண்ணுங்க….
News December 11, 2025
திருவாரூர்: 300 கிலோ குட்கா பறிமுதல்

எரவாஞ்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி, அவரிடம் இருந்த மூட்டைகளை சோதனை செய்த போது அதில் 10கி புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்ததில் அவர் கும்பகோணத்தைச் சேர்ந்த தலபத்குமார்(31) என்பதும், அவர் மேலும் 300கி குட்கா பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்து, குட்காவை பறிமுதல் செய்தனர்.


