News October 15, 2025

திருவாரூர்: தினமும் 1000 நெல்மூட்டைகள் கொள்முதல்

image

திருவாரூர் மாவட்ட கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளை இயக்கம் செய்ய 5 மண்டல மேலாளர்களை கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தினமும் 1000 மூட்டைகள் கொள்முதல் செய்யவும், இரவு 8 மணி வரை பணியை தொடரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளது என்று ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 15, 2025

திருவாரூர் காவல்துறை எச்சரிக்கை

image

வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் பரிவாஹன் என்ற பெயரில் போலி லிங்குடன் APK கோப்புகள் அனுப்பப்படுவதாகவும், இது போன்ற லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் இதன் மூலம் தங்களின் தரவுகள், பணம் திருடப்படலாம் என்றும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News October 15, 2025

திருவாரூர்: வெள்ளதடுப்பு முன்னெச்சரிக்கை!

image

திருவாரூர் மாவட்டம், தட்டான்கோவில் முள்ளியாறு தலைப்பில் வெள்ளதடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், நீரின் அளவு மற்றும் வெள்ளதடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள், காலிசாக்குகள், மணல் மற்றும் சவுக்குகம்புகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

News October 15, 2025

திருவாரூர்: சம்பா நெல் பயிர் காப்பீடு அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் தற்போது துவக்கப்பட்டுள்ள சம்பா நெற்பயிர் காப்பீடு செய்து பயனடையலாம் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். வருகின்ற நவம்பர் 15-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கு ஹெக்டருக்கு ரூ.1393 காப்பீட்டு கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!