News December 24, 2024
திருவாரூர்: தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் டிச.23 முதல் டிச.26 வரையிலான நாட்களில், அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையத்தில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக சிறப்பு கட்டணம் செலுத்தி இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.
Similar News
News September 15, 2025
திருவாரூர்: இழந்ததை மீட்டுத் தரும் கோயில்

திருவாரூர் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் முருகனின் சிலையை வடித்த சிற்பியின் இரு கண்களை, முத்தரச சோழன் தானமாக பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு முருகன் கண்களை வழங்கியதால் எண்கண் முருகன் என பெயர் வந்துள்ளது. இதனால் இங்கு வழிபட்டால் இழந்தவை எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.
News September 15, 2025
திருவாரூரில் அன்புக் கரங்கள் திட்டம் தொடக்கம்

அன்பு கரங்கள் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் தாட்கோ தலைவர் நா.இளையராஜா, சட்டமன்ற உறுப்பினர் கே.கலைவாணன், மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் ஆகியோர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடையாள அட்டை வழங்கினர்.
News September 15, 2025
திருவாரூர் மக்களே நில விபரங்களை அறிய எளிய வழி!

திருவாரூர் மக்களே…உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் உங்களது நில விவரம், பட்டா திருத்தம், புல எல்லை வரைபடம் உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ளலாம் அல்லது உரிய ஆவணங்களுடன் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க..