News February 8, 2025
திருவாரூர்: டிராக்டர் மீது டூவீலர் மோதியதில் வாலிபர் பலி

திருவாரூர் அருகே அரிவளூரை சேர்ந்த கபில்ராஜ் (26), கருப்புரை சேர்ந்த ஸ்ரீராம் (25) ஆகியோர் சம்பவத்தன்று இரவு ஒரு டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மேல அணக்குடி என்ற இடத்தில் சாலையோரம் டிராக்டர் ஒன்று நின்று கொண்டிருந்தது. பனிமூட்டம் அதிகாமாக இருந்த காரணத்தால் டிராக்டர் நிற்பது தெரியாமல் இளைஞர்கள் ஓட்டிவந்த டூவீலர் டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஸ்ரீராம் பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News July 8, 2025
திருவாரூர்: 70% மானியத்தில் சோலார் பம்புசெட்

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில் 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. <
News July 8, 2025
உங்களுடன் முதல்வர் முகாம் விண்ணப்பம் வழங்கல்

திருவாரூர் நகர்ப் பகுதிக்கு உட்பட்ட மேலவடபோக்கித் தெருவில் உங்களுடன் முதல்வர் திட்ட முகாமின் விண்ணப்பத்தினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், இன்று (ஜூலை 8) மேலவடபோக்கி தெரு பகுதி மக்களின் வீடுகளுக்கு சென்று வழங்கினார். இதில் நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், திமுக நகரச் செயலாளர் வாரை பிரகாஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
News July 8, 2025
திருவாரூர்: கோழி பண்ணை அமைக்க 50% மானியம் (1/2)

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க! <<16989990>>(பாகம்-2)<<>>