News December 26, 2025
திருவாரூர்: டாஸ்மாக் பாரின் கதவை உடைத்து திருட்டு

கொரடாச்சேரி அருகே கமலாபுரத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (53). இவர் கமலாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே பார் வைத்து நடத்தி வருகிறார். இவர் டிச.24 பார் கதவை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மீண்டும் நேற்று காலையில் திரும்பி வந்து பார்த்தபோது பாரின் கதவு உடைக்கப்பட்டு, ரூ.3 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிசென்றதாக முருகானந்தம் கொடுத்த புகாரின் பேரில், கொரடாச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 26, 2025
திருவாரூர் மக்களே இனி அலைச்சல் வேண்டாம்!

பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) திருவாரூர் மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://tiruvarur.nic.in/ta/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 26, 2025
திருவாரூர்: திருக்கண்ணமங்கை திருஅத்யயன உற்சவம்

108 திவ்ய தேசங்களில் 16வது திவ்ய தேசமான திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவத்சலம் பெருமாள் கோயிலில் திருஅத்யயன உற்சவத்தில் 29.12.2025 அன்று இரவு 7 மணிக்கு மோகினி அலங்காரமும் 30.12.2025 அன்று அதிகாலை 5 மணிக்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பும் நடைபெறுகிறது. இந்நிகழ்வுகளில் பக்தர்கள் கலந்து கொண்டு அருள்பெற ஆலய நிர்வாகத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News December 26, 2025
திருவாரூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (VAO) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் VAO யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருவாரூர் மாவட்ட மக்கள் 04366226970 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!


