News September 4, 2025
திருவாரூர்: டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்

நாளை (செப்.05) மிலாடி நபி தினத்தையொட்டி, அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை இல்லாத உலர் நாளாக தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் முழுவதுமாக நாளை ஒரு நாள் மூடிடவும், அரசின் விதிமுறைகளை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது எனவும் திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.
Similar News
News March 9, 2026
திருவாரூர் வழியாக புதிய பயணிகள் ரயில் சேவை!

காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு இயக்கப்படும் புதிய பயணிகள் ரயில் சேவை வரும் 11-ம் தேதி முதல் துவங்க உள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி காரைக்குடியில் காலை 6:15க்கு புறப்பட்டு முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், பேரளம் வழியாக மயிலாடுதுறையை 10:40க்கு சென்றடையும், மறுமார்க்கத்தில் மாலை 5:10க்கு புறப்பட்டு 9:15க்கு காரைக்குடியை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 9, 2026
திருவாரூர் வழியாக புதிய பயணிகள் ரயில் சேவை!

காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு இயக்கப்படும் புதிய பயணிகள் ரயில் சேவை வரும் 11-ம் தேதி முதல் துவங்க உள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி காரைக்குடியில் காலை 6:15க்கு புறப்பட்டு முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், பேரளம் வழியாக மயிலாடுதுறையை 10:40க்கு சென்றடையும், மறுமார்க்கத்தில் மாலை 5:10க்கு புறப்பட்டு 9:15க்கு காரைக்குடியை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 9, 2026
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.8) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


