News January 12, 2025

திருவாரூர்: சீமான் மீது குவியும் புகார்கள்

image

வடலூரில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பெரியார் குறித்து அவதூறான வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை சீமான் தெரிவித்தார். இதனால் கொதித்தெழுந்த திராவிட இயக்கத்தினர் தமிழகம் முழுவதும் சீமான் மீது காவல் நிலையங்களில் புகாரளித்து வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் சீமான் மீது 30-க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Similar News

News December 13, 2025

திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய ரயில்கள்

image

வரும் 01.01.2026 முதல் தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் சில பயணிகள் ரயில்கள் நிரந்தர ரயில்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது வரை சிறப்பு ரயிலாக இயங்கி வரும் திருவாரூர் – காரைக்குடி, காரைக்குடி – திருவாரூர் மற்றும் பட்டுக்கோட்டை – திருவாரூர், திருவாரூர் – பட்டுக்கோட்டை ஆகிய ரயில்கள் நிரந்தரமாக இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

News December 13, 2025

திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய ரயில்கள்

image

வரும் 01.01.2026 முதல் தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் சில பயணிகள் ரயில்கள் நிரந்தர ரயில்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது வரை சிறப்பு ரயிலாக இயங்கி வரும் திருவாரூர் – காரைக்குடி, காரைக்குடி – திருவாரூர் மற்றும் பட்டுக்கோட்டை – திருவாரூர், திருவாரூர் – பட்டுக்கோட்டை ஆகிய ரயில்கள் நிரந்தரமாக இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

News December 13, 2025

திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (டிச.12) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!