News January 22, 2026

திருவாரூர்: சாலையில் சென்ற தம்பதியர் மீது தாக்குதல்!

image

காவனூரைச் சேர்ந்தவர் முருகையன் (43)-மேகலா (39) தம்பதி. அதே பகுதியில் வசிப்பவர் ஆனந்தராஜ் (28). இவர்களுக்குள் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று முருகையனும், மேகலாவும் சாலையில் நடந்து சென்றபோது, அங்கு வந்த ஆனந்தராஜ், தம்பதியரை கத்தியை காட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கொரடாச்சேரி காவல் நிலையத்தில் மேகலா அளித்த புகாரின் பேரில் ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Similar News

News January 22, 2026

திருவாரூர்: பண்ணை தொழிலுக்கு ரூ.20 லட்சம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in<<>> என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News January 22, 2026

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

“திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை திறன் குறைபாடுடையவர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆகியோர் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ள, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக, இலவச பேருந்து பயண அட்டையினை விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2412590 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.” என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News January 22, 2026

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

“திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை திறன் குறைபாடுடையவர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆகியோர் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ள, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக, இலவச பேருந்து பயண அட்டையினை விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2412590 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.” என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!