News April 13, 2024
திருவாரூர்: காந்தி சிலை முன்பு வயதான தம்பதி உண்ணாவிரதம்

முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் இடையர்காடு கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டராமன். அவரது மனைவி தங்கராணி ஆகியோர் தனது பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று உண்ணாவிரதம் இருந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஏப்ரல்.25ஆம் தேதிக்குள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதால் அங்கிருந்து புறப்பட்டனர்.
Similar News
News October 31, 2025
திருவாரூர்: பயிர் காப்பீடு செய்ய தேதி அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா பயிர்களுக்கான பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15 வரை பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதன் படி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகள், இ-சேவை மையம் அல்லது https://www.pmfby.gov.in என்ற இணையதள வாயிலாகவும் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News October 31, 2025
திருவாரூர்: SDPI கட்சியினர் மீது வழக்குப் பதிவு

முத்துப்பேட்டை SDPI கட்சி சார்பில் பாஜகவைச் சேர்ந்த வேலூர் இப்ராஹிமை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என குறிப்பிட்டு போஸ்டர் அடித்து நகர் பகுதியில் ஒட்டப்பட்டது. இதனையடுத்து போஸ்டர் ஒட்டிய SDPI கட்சியின் நகர செயலாளர் அப்துல் மாலிக், பக்கிரிவாடி தெருவைச் சேர்ந்த முகமது மாலிக் ஆகிய இருவர் மீது முத்துப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News October 31, 2025
திருவாரூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


