News September 28, 2025
திருவாரூர்: காசிக்கு நிகரான புண்ணிய ஆலயம்

நன்னிலம் அடுத்த ஸ்ரீவாஞ்சியத்தில் ஶ்ரீவாஞ்சிநாத சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ராகுவும், கேதுவும் ஒரு உடல் கொண்டு காட்சியளிக்கின்றனர். மேலும் இங்கு எமதர்மனுக்கு தனி சன்னதி உள்ளது. எமதர்மனுக்கு பாவ விமோசனம் வழங்கிய இந்த கோயிலில் சிவபெருமானை தன் தோளில் சுமந்து எமதர்மன் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இக்கோயில் காசிக்கு நிகரான தலமாக கூறப்படுகிறது. தெரியாதவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க.
Similar News
News January 5, 2026
திருவாரூர்: காா் மோதி பெண் பலி-ஒருவர் கைது

பரவாக்கோட்டை வடக்கு தெருவைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மனைவி கயல்விழி. இவர், நேற்று அதே பகுதியில் சாலையோரம் நடந்து சென்றபோது அவ்வழியே மன்னாா்குடி பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த பீட்டர் என்பவர் அதிவேகமாக ஓட்டிவந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, கயல்விழி மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பரவாக்கோட்டை போலீசார் பீட்டரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 5, 2026
திருவாரூர் அருகே அரசு பேருந்து விபத்து

சென்னை கொரட்டூர் சேர்ந்தவர் சிவராமன். இவர் தனது குடும்பத்துடன் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வைதீஸ்வரன் கோவிலுக்கு சென்றுவிட்டு உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக காரில் கும்பகோணம் நன்னிலம் நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். அப்போது முன் சக்கரம் வெடித்தில் முன்னாள் சென்ற பேருந்து மீது கார் மோதியதில் இதில் பேருந்தில் பின் பக்க சக்கரமும் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் ஏதுமில்லை.
News January 5, 2026
திருவாரூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.4) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.5) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


