News September 25, 2025
திருவாரூர்: கல்வி உதவித்தொகை திட்டம் குறித்து அறிவிப்பு

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM-Yasasvi-Top class education in schools for OBC,EBC and DNT students கல்வி உதவித்தொகை பெற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்ட்டலில் விண்ணப்பத்து பயன்பெறலாம் எனவும், இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறும் திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 25, 2025
திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். மேலும் இந்நிகழ்வில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அதிகாரிகளும், அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
News September 25, 2025
திருவாரூர்: மாவட்ட அளவிலான என்எஸ்எஸ் சிறப்பு முகாம்

திருவாரூர் மாவட்ட அளவிலான என்எஸ்எஸ் திட்ட அலுவலர்கள் கூட்டம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாலை (செப்.24) நடைபெற்றது. இதில் மாவட்ட தொடர்பு அலுவலர் சக்கரபாணி தலைமை வகித்தார். திட்ட அலுவலர் புலிவலம் உலகநாதன் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி சிறப்பு முகாம் முழுப் பாதுகாப்புடனும் பள்ளி கல்வி இயக்ககம் தந்துள்ள விதிமுறைகள் படியும் சிறப்பாக நடத்தவேண்டும் என்று தெரிவித்தார்.
News September 25, 2025
திருவாரூர்: குரூப் 2 தேர்வு எழுதவுள்ள 8327 பேர்

வருகின்ற 28-ம் தேதி, திருவாரூர் மாவட்டத்தில் 27 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வினை 8,327 பேர் எழுதுகின்றனர். தேர்வு நடைபெறும் பகுதிகளுக்கு அன்றைய தினம் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் வந்து விட வேண்டுமென்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.