News December 13, 2024
திருவாரூர் கலெக்டர் அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வரும் டிசம்பர் 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம் என்றும், அதற்கு உடனடி தீர்வு காணப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 6, 2026
திருவாரூர்: மகன் கழுத்தை அறுத்து கொன்ற தந்தை!

பேரளம் அருகே உள்ள கடகம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (26). இவர் சம்பவத்தன்று கழுத்து அறுபட்ட நிலையில் வீட்டில் சடலமாக இருந்துள்ளார். இது குறித்து அவரது தந்தை மனோகரன் (54) பேரளம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை செய்ததில், மனோகரனே தனது மகன் அய்யப்பனை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, நாடகமாடியது தெரியவந்தது. இதனை அடுத்து தற்போது மனோகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
News March 6, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (மார்ச்.5) இரவு 10 மணி முதல் (மார்ச்.6) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 5, 2026
திருவாரூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ திருவாரூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04366-226767
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free: 1800 4252 441
▶️ சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️ உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை SHARE பண்ணுங்க


