News December 26, 2025
திருவாரூர்: கணவர் இறந்ததால் மனைவி தற்கொலை

நீடாமங்கலம் அருகே குடிதாங்கிச்சேரியைச் சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி சித்ரா (40). சுதாகர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் சித்ரா மன வேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில், சித்ரா தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Similar News
News December 30, 2025
திருவாரூர்: அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

முத்துப்பேட்டை, ஆலங்காடு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் தலைவர் குணாவதி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து அரசு துறை ஓய்வூதியர்கள் சங்க தலைவர் கோவி.ரெங்கசாமி, சிஐடியூ மாவட்ட குழு உறுப்பினர் செல்லத்துரை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர்.
News December 30, 2025
திருவாரூர்: லாரி மோதி ஒருவர் பலி

திருவாரூர், நீடாமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கோவில்வெண்ணி பகுதியில், திருவாரூர்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகில், நேற்று (டிச.29) காலை 8 மணி அளவில் லாரி அதிவேகமாக வந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தற்போது நீடாமங்கலம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
News December 30, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், நேற்று (டிச.29) இரவு 10 மணி முதல் இன்று (டிச.30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


