News November 7, 2025

திருவாரூர்: கடலில் தவறி விழுந்தவர் பலி

image

முத்துப்பேட்டை கடல் முகத்துவார பகுதியில் மன்னங்காடை சேர்ந்த மீனவர் ரவி (39) மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடலில் தவறி விழுந்து மூழ்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் ரவியை சடலமாக மீட்டனர். இதையடுத்து அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 7, 2025

திருவாரூர் அருகே அரசு மருத்துவமனையில் ரகளை

image

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு விமலநாதன் (23) என்ற வாலிபர் காலில் அடிப்பட்டு சிகிச்சைக்காக கடும் குடிபோதையில் வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை விமலநாதன் ஆபாசமாக திட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் ரகளையில் ஈடுபட்ட விமலநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 7, 2025

திருவாரூர்: பெண்ணுக்கு 54 ஆண்டுகள் சிறை!

image

எரவாஞ்சேரி பகுதியில் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வந்த லலிதா, அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை நேற்று திருவாரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் லலிதாவிற்கு போக்கோ சட்டத்தின் கீழ் 54 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.18,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

News November 7, 2025

திருவாரூர்: இரவு ரோந்து பணி விவரங்கள்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!