News April 11, 2024

திருவாரூர்: கஞ்சாவுடன் சிக்கிய வாலிபர்

image

திருத்துறைப்பூண்டி, ராயநல்லூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் ராயநல்லூர் கடை தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ராயநல்லூர் செட்டிமுளை தென்பாதி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (26) விற்பனைக்காக 1,250 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்தனர்.

Similar News

News September 1, 2025

திருவாரூர்: தெரு நாய்கள் தொல்லையா? இத செங்க!

image

தமிழகத்தில் அண்மைக்காலமாகத் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரு நாய்கள் கடிக்கு ஆளாகின்றனர். இனி தெருக்களில் கூட்டம் கூட்டமாகத் திரியும் தெரு நாய்களைக் கண்டு அச்சமடையவோ, கவலையோ வேண்டாம் உங்கள் பகுதியில் தெரு நாய்கள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 1100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்!

News September 1, 2025

எட்டு வயது சிறுவன் பாம்பு கடித்து பலி

image

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கொல்லுமாங்குடி பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் கவின் என்பவர் வீட்டிற்கு அருகே விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென அங்கு வந்த பாம்பு சிறுவனை கடித்தது. இதையடுத்து உடனடியாக நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News September 1, 2025

எட்டு வயது சிறுவன் பாம்பு கடித்து பலி

image

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கொல்லுமாங்குடி பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் கவின் என்பவர் வீட்டிற்கு அருகே விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென அங்கு வந்த பாம்பு சிறுவனை கடித்தது. இதையடுத்து உடனடியாக நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!