News April 11, 2024
திருவாரூர்: கஞ்சாவுடன் சிக்கிய வாலிபர்

திருத்துறைப்பூண்டி, ராயநல்லூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் ராயநல்லூர் கடை தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ராயநல்லூர் செட்டிமுளை தென்பாதி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (26) விற்பனைக்காக 1,250 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்தனர்.
Similar News
News July 6, 2025
மன்னார்குடி தெப்பத்திருவிழா; கட்டுமான பணிகள் தீவிரம்

ஆசியாவிலேயே மிகவும் பெரிய தெப்பக்குளம் என்று போற்றப்படும் மன்னார்குடி ஹரித்ராநதி குளத்தில் வருகின்ற ஜூலை 10ம் தேதி இராஜகோபால சுவாமி கோயில் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தெப்பம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த நூறு வருடங்களுக்கு மேலாக மன்னார்குடி வர்த்தக சங்கத்தினர் இந்த திருவிழாவை உபயமாக ஏற்று செய்து வருகின்றனர்.
News July 5, 2025
திருவாரூர்: ரூ.1.2 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் <
News July 5, 2025
திருவாரூர்: மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

“மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூலை 11 காலை 11 மணிக்கு மாற்றுத்திறனாளிக்கான சிறப்புக் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அவர்களது நலத்திட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் திருவாரூர் கோட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் எழுத்துப்பூர்வமான மனுக்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.” என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.