News September 25, 2025

திருவாரூர்: ஊராட்சி ஒன்றியங்களில் வேலை!

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு<> இங்கே க்ளிக் <<>>செய்யவும். SHARE பண்ணுங்க!

Similar News

News September 25, 2025

திருவாரூரில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்

image

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வாயிலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் இன்று (செப்.25) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாவட்ட ஒன்றிய ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News September 25, 2025

திருவாரூர்: கல்வி உதவித்தொகை திட்டம் குறித்து அறிவிப்பு

image

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM-Yasasvi-Top class education in schools for OBC,EBC and DNT students கல்வி உதவித்தொகை பெற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்ட்டலில் விண்ணப்பத்து பயன்பெறலாம் எனவும், இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறும் திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

News September 25, 2025

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். மேலும் இந்நிகழ்வில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அதிகாரிகளும், அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!