News May 22, 2024
திருவாரூர்: உலக புகழ் பெற்ற பிரம்மாண்ட தெப்ப திருவிழா

உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஆழி தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தெப்பத் திருவிழா இன்று இரவு முதல் 3 தினங்கள் நடைபெற உள்ளது. இந்த தெப்ப திருவிழாவில் ஒரே நேரத்தில் 800 பேர் அளவிற்கு பயணம் செய்யும் வகையில் கட்டப்பட்ட தெப்பத்தில் 400 நபர்கள் வரை பொதுமக்கள் பயணிக்க காவல்துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 7, 2025
திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.,6) இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News September 6, 2025
திருவாரூர்: கோழிப்பண்ணை அமைக்க மானியம்

திருவாரூர், நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் இலவச கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியம் வழங்கப்படுகிறது. இதனை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பித்து பெறலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News September 6, 2025
திருவாரூர்: ITI, டிப்ளமோ போதும்.. சூப்பர் வாய்ப்பு

திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ முடித்த விருப்பம் உள்ளவர்கள்<