News February 5, 2026
திருவாரூர்: இளைஞர் உயிரை காவு வாங்கிய தெருநாய்

நன்னிலம் அடுத்த முடிகொண்டானைச் சேர்ந்தவர் ஆகாஷ் (22). கடந்த 3 மாதங்களுக்கு முன் தெருநாய் ஒன்று இவரை கடித்துள்ளது. அவர் அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் ஊசி போட்டு விட்டு, முறையான சிகிச்சை பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆகாஷ் நடவடிக்கையில் மாற்றம் இருந்ததால், மருத்துவ பரிசோதனை செய்த போது ரேபிஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. பின் தீவிர சிகிச்சையில் இருந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News February 7, 2026
திருவாரூர்: மூட்டை மூட்டையாக சாராயம் பறிமுதல்

நன்னிலம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் மாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு ஸ்கூட்டரை போலீசார் நிறுத்தி சோதனை செய்ததில், அதில் சாக்கு மூட்டையில் 250 புதுச்சேரி சாராய பாட்டில்கள் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், எழுமுகந்தனூர் பகுதியை சேர்ந்த அன்பு (52) என்பவரை கைது செய்தனர்.
News February 7, 2026
திருவாரூர்: மூட்டை மூட்டையாக சாராயம் பறிமுதல்

நன்னிலம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் மாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு ஸ்கூட்டரை போலீசார் நிறுத்தி சோதனை செய்ததில், அதில் சாக்கு மூட்டையில் 250 புதுச்சேரி சாராய பாட்டில்கள் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், எழுமுகந்தனூர் பகுதியை சேர்ந்த அன்பு (52) என்பவரை கைது செய்தனர்.
News February 7, 2026
திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (பிப்.6) இரவு 10 மணி முதல், (பிப்.07) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


