News October 28, 2025

திருவாரூர்: இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

image

கூத்தாநல்லூர் அருகே சேகரை, மிளகுகுளம் தெருவைச் சேர்ந்த லாரி டிரைவர் புருசோத்தமன் (28) என்பவர், சாலையில் தனியாக நடந்து சென்ற 26 வயதுடைய இளம் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த பெண் கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர் கூறிய சாலையில் உள்ள CCTV காட்சியை ஆய்வு செய்ததில் அந்த புகார் உறுதி செய்யப்பட்டு, புருசோத்தமனை கைது செய்தனர்.

Similar News

News October 28, 2025

திருவாரூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 28, 2025

தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெற அழைப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ்
நவம்பர் 2025 மாதத்திற்கு 03.04.11.2025 ஆகிய நாட்களில் 65 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது. எனவே தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் மேற்கண்ட திட்டத்தினை பயன்படுத்தி பயனடையுமாறு திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

News October 28, 2025

திருவாரூர்: ரூ.30,000 சம்பளத்தில் அஞ்சல் துறை வேலை

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க…

error: Content is protected !!