News August 26, 2025
திருவாரூர்: அரசு பேருந்து குறித்து புகார் அளிக்க வேண்டுமா?

திருவாரூர் மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து, உங்களது புகார் அல்லது குறைகளை தெரிவிக்க ‘1800 599 1500’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் பேருந்து கால தாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர் அல்லது நடத்துநர் பயணிகளிடம் தரக்குறைவாக நடந்து கொள்வது குறித்து உங்களால் வீட்டிலிருந்த படியே புகார் தெரிவிக்க முடியும். இந்த தகவலை SHARE செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்க!
Similar News
News August 26, 2025
பள்ளி குழந்தைகளுடன் உணவருந்திய ஆட்சியர்

த்மிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட ஆர்.சி.பாத்திமா அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகை எம்.பி செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கே.கலைவாணன், ஆட்சியர் மோகனச்சந்திரன் ஆகியோர் பள்ளி குழந்தைகளுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.
News August 26, 2025
திருவாரூர்: தாசில்தார் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது தாசில்தார் அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருவாரூர் மாவட்ட மக்கள் 04366226970 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News August 26, 2025
திருவாரூர்: ஜனாதிபதி தலைமையில் பட்டமளிப்பு விழா!

திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழா வருகிற செப்.3-ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு தங்க பதக்கங்களை மாணவர்களுக்கு வழங்குகிறார். இந்த ஆண்டு 568 மாணவிகள், 442 மாணவர்கள் என 1,010 பேர் பட்டம் பெறுகின்றனர். இதில் 45 மாணவ-மாணவிகளுக்கு தங்க பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன என துணைவேந்தர் கிருஷ்ணன் கூறியுள்ளார்.