News December 28, 2025

திருவாரூர்: அரசு பள்ளி மாணவியருக்கு ஊக்கத்தொகை

image

திருவாரூர் மாவட்டம், கிராமப்புற பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கவும், கல்வியின் இடைநிற்றலை குறைக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவியருக்கு ஊக்கத்தொகை 3 ஆம் வகுப்பு முதல், 5 வரை மாணவியருக்கு ரூ.500, 6 ஆம் வகுப்பு மாணவியருக்கு ரூ1000, இதற்கு பெற்றோர்கள் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News December 30, 2025

திருவாரூர்: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு?

image

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. Ayushman App செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து, அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய <>இங்கே கிளிக் செய்யவும்<<>>. இத்திட்டம் குறித்து அனைவருக்கும் Share செய்து தெரியப்படுத்துங்கள்.

News December 30, 2025

திருவாரூர்: கோழி கொட்டகை அமைக்க 100% மானியம்

image

திருவாரூர், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த MGNREGA திட்டத்தின் கீழ், கோழிக் கொட்டகை 100 % மானியத்துடன் கட்டித் தரப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதில் பயன்பெற விரும்புவோர் தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம்.

News December 30, 2025

திருவாரூர்: வங்கி தொகை உரியவர்களிடம் ஒப்படைப்பு

image

நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கியில் உள்ள வைப்புத்தொகைகளை தீர்வு கண்டறிந்து உரியவரிடம் ஒப்படைக்க சிறப்பு முகாம்களை நடத்துமாறு, இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது. அதன்படி நேற்று திருவாரூர் ஆட்சியர் கூட்டரங்கில், அவ்வாறு உரிமை கோரப்படாமல் இருந்து பணத்தினை விதிகளின் படி உரிய நபர்களிடம் ஆட்சியர் வழங்கினார். இந்த நிகழ்வின்போது வங்கி அதிகாரிகள் உடனிருந்தனர்.

error: Content is protected !!