News January 7, 2026
திருவாரூர்: அப்பா கடையில் திருடிய மகன் கைது

மன்னார்குடி வினோபாஜி தெருவை சேர்ந்தவர் சையது அலி. இவர் அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடையில் கடந்த 4-ந்தேதி இரவு புகுந்த மர்ம நபர்கள் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.60,000 பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து மன்னார்குடி போலீசார் நடத்திய விசாரணையில், சையது அலியின் மகன் முகமது பைசல் (24) பணத்தை திருடியது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Similar News
News January 26, 2026
திருவாரூர்: எதிரிகள் தொல்லை நீங்க வேண்டுமா?

திருவாரூர் மாவட்டத்தில் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. வாழ்க்கையில் தேவையில்லாத எதிர்ப்புகள், மறைமுக எதிரிகள் மற்றும் பொறாமைத் தொல்லைகளால் அவதிப்படுபவர்கள், இக்கோயிலின் மூலவரான வீரட்டானேஸ்வரருக்கு வஸ்திரம் சாத்தி, முறைப்படி அபிஷேகம் செய்து வழிபட்டால், அந்தத் துன்பங்கள் யாவும் விலகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!
News January 26, 2026
திருவாரூர்: வங்கி வேலை..ரூ. 48,000 சம்பளம்!

யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள Generalist and Specialist Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 173
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.48,480 – 93,960
5. கல்வி தகுதி: B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA
6. கடைசி தேதி: 02.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 26, 2026
திருவாரூர்: ஆதாரில் திருத்தம் செய்வது இனி ரொம்ப ஈஸி!

திருவாரூர் மக்களே, ஆதார் அட்டையில் உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே ‘<


