News October 14, 2024

திருவாரூரில் வாக்காளர் பட்டியல் குறித்த சிறப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளில் நவம்பர் 9-10, 23-24, ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்குதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை நடைபெறும். மேலும் 2025 ஜனவரி 1ஆம் தேதி அன்று 18 வயது நிறைவடைந்தவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6-ஐ கொண்டு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News September 14, 2025

திருவாரூர்: 16 வயது சிறுமி கர்ப்பம்; பாய்ந்த போக்சோ

image

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ் (32). இவர் 16 வயதுடைய சிறுமி ஒருவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி, கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த வலங்கைமான் ஊர்நல அலுவலர் கலைவாணி நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் அருள்தாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 14, 2025

மன்னார்குடியில் சாலை மறியல் அறிவிப்பு

image

மன்னார்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், எள், பருத்தி, உளுந்து, போன்றவற்றிற்கு காப்பீட்டுக்கான இழப்பீட்டு தொகையை வழங்காமல் இன்சூரன்ஸ் நிறுவனம் இழுத்தடிப்பு செய்து வருவதை கண்டித்து செப்.16-ந் தேதி மன்னார்குடி கீழப்பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் எம்.பி வை.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News September 14, 2025

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவல் விவரங்கள்

image

திருவாரூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!