News August 16, 2024
திருவாரூரில் மகளிர் உரிமை தொகை பெற சிறப்பு முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகையை இதுவரை பெறாதவர்கள் விண்ணப்பிக்க சிறப்பு முகாம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட்.17 (சனிக்கிழமை) முதல் ஆகஸ்ட்.20 (செவ்வாய்க்கிழமை) வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள பெண்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ தெரிவித்துள்ளார்.
Similar News
News January 22, 2026
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

“திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை திறன் குறைபாடுடையவர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆகியோர் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ள, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக, இலவச பேருந்து பயண அட்டையினை விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2412590 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.” என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News January 22, 2026
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

“திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை திறன் குறைபாடுடையவர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆகியோர் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ள, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக, இலவச பேருந்து பயண அட்டையினை விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2412590 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.” என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News January 22, 2026
திருவாரூர்: சாலையில் சென்ற தம்பதியர் மீது தாக்குதல்!

காவனூரைச் சேர்ந்தவர் முருகையன் (43)-மேகலா (39) தம்பதி. அதே பகுதியில் வசிப்பவர் ஆனந்தராஜ் (28). இவர்களுக்குள் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று முருகையனும், மேகலாவும் சாலையில் நடந்து சென்றபோது, அங்கு வந்த ஆனந்தராஜ், தம்பதியரை கத்தியை காட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கொரடாச்சேரி காவல் நிலையத்தில் மேகலா அளித்த புகாரின் பேரில் ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.


