News March 20, 2024

திருவாரூரில் நாளை ஆழித்தேரோட்டம்

image

தியாகராஜ சாமி கோயிலில் நிகழாண்டு பங்குனி உத்திரப் பெருவிழா பிப். 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு மிக்க ஆழித்தேரோட்டம் நாளை (மாா்ச்.21) காலை 5.30 மணியளவில் விநாயகா், சுப்ரமணியா் தோ்கள் வடம் பிடிக்கப்பட உள்ளன. தொடர்ந்து காலை 8.50 மணிக்கு மேல் ஆழித்தேர் வடம் பிடிக்க உள்ளது. 

Similar News

News November 4, 2025

திருவாரூர்: முக்கிய சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

image

உங்களது 10th, 12th மார்க் சீட் அல்லது சாதி சான்றிதழ் உள்ளிட்டவை காணாமல் / கிழிந்துவிட்டால் கவலை பட வேண்டாம். <>இ-பெட்டகம்<<>> என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான பல்வேறு முக்கிய சான்றிதழ்களை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். (குறிப்பு: 2015-ம் ஆண்டுக்கு பின் வழங்கப்பட்ட சான்றிதழ்களுக்கு மட்டுமே இது பொருந்தும்) SHARE NOW!

News November 4, 2025

திருவாரூர் வருகை தந்த பிரபல நடிகர்!

image

பக்ரைனியில் நடைபெற்ற இளையோர் கபடி போட்டியில், வடுவூர் பகுதியில் சேர்ந்த அபினேஷ் இந்தியாவிற்காக தங்கப் பதக்கம் வென்றார். அவரை வாழ்த்தும் விதமாக நேரடியாக வடுவூருக்கு வந்த நடிகர் துருவ் விக்ரம் அபினேஷை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், துருவ் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பைசன்’ திரைப்படம் கபடியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News November 4, 2025

திருவாரூர்: சாராயம் கடத்திய இருவர் கைது

image

நன்னிலம் பேரளம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனையில் இருசக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புதுச்சேரி சாராய பாட்டில்களை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், கடத்தி வந்த புதுச்சேரி சாராய பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!