News November 20, 2024
திருவாரூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

திருவாரூர் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நவம்பர் 22ஆம் தேதி நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட தகுதியான நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். இதில் கலந்து கொள்ள 18 வயது நிரம்பியவர்கள் தங்களின் ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்றுடன் நேரில் செல்ல ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News September 15, 2025
திருவாரூர்: தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை

கொரடாச்சேரி போலீஸ் சரகம் மலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாசம் (53). இவரது மகன் பூவரசன் (22) திருப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 15 தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான மலையூருக்கு வந்த பூவரசன் மீண்டும் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை தந்தை கைலாசம் கண்டித்து வேலைக்குப் போகுமாறு கூறியுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த பூவரசன், வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
News September 15, 2025
திருவாரூர்: சமுதாய வள பயிற்றுநர் நியமன அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தினை அமைத்திட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சிறப்பாக செயல்படும், செயல்பாட்டில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சமுதாய வள பயிற்றுநராக நியமிக்கப்படவுள்ளனர். இதற்கு, தொடர்புடைய வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று நாளைக்குள் (செப்.16) விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.
News September 15, 2025
திருவாரூர் மாவட்ட ரோந்து காவலர்களின் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.