News March 29, 2025
திருவாரூரில் அருளும் வராஹ பெருமான்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த மகாதேவப்பட்டினம் பகுதியில் சரபோஜி மன்னர் காலத்தில் கட்டப்பட்ட 400 ஆண்டு பழமையான வராஹப் பெருமான் கோயில் உள்ளது. தற்போது இப்பகுதி மகாதேவபட்டினம் அரண்மனை என்று அழைக்கப்படுகிறது. சுற்றி அமைக்கப்பட்ட மதில் சுவர்களுக்கு இடையே சன்னதியில் வராஹப் பெருமான் காட்சி தருகிறார். வாரம்தோறும் சனிக்கிழமைகள் வராஹப் பெருமானின் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். SHARE பண்ணுங்க.
Similar News
News September 17, 2025
திருவாரூர்: கீழவீதியில் விஜய் பிரச்சாரம்!

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 13ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வரும் செப்.,20-ம் தேதி சனிக்கிழமை திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக திருவாரூர் மாவட்ட காவல்துறையிடம் நேற்று தவெகவினர் மனு அளித்த நிலையில் இன்று காவல்துறை சார்பில் கீழ வீதி பகுதியில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
News September 16, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.16) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News September 16, 2025
திருவாரூர்: தொழில் முனைவோராக சூப்பர் வாய்ப்பு

திருவாரூர்..வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க தமிழகத்தில் UYEGP என்ற சூப்பரான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.5,00,000-ரூ.15,00,000 வரை 25% மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 8th தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தியடைந்தால் போதும், <