News March 28, 2025

திருவாடானை பெயர் வரக் காரணம் இது தான்!

image

திருவாடானை பழைமையான ஊர். இந்தப் பெயர் வரக் காரணமாக சொல்லப்படுவது வருணனின் மகனான வாருணிக்கு துர்வாச முனிவர் கொடுத்த சாபத்தினால் ஆட்டுத்தலையுடன் யானை உடலுமாக மாறினான் வாருணி. அவனது சாபம் நீங்க இங்கு உள்ள குளத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றான். இதனால் ஆடு + ஆணை, திரு எனும் அடைமொழியோடு திருவாடானை ஆனது. முக்திபுரம் அஜகஜபுரம் என பல பெயர்களும் உண்டு. தேவராரபாடல் பெற்ற ஆதிரெத்தினேஸ்வரர் தலம் உள்ளது.

Similar News

News March 31, 2025

மோடி வருகையை கண்டித்து போராட்டம்

image

பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஏப்.6 அன்று திறந்து வைத்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார். இந்நிலையில் மோடி வருகையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (மார்ச்.31) தெரிவித்துள்ளார்.

News March 31, 2025

புத்தகத் திருவிழாவில் ரூ.1 கோடிக்கு புத்தகம் விற்பனை

image

ராமநாதபுரம் மாவட்ட நிருவாகம், கலை இலக்கிய ஆர்வலர் சங்கம் சார்பில் 7வது புத்தகத் திருவிழா மார்ச் 21 அன்று தொடங்கியது. 10 நாள் நடைபெற்ற திருவிழா நேற்று மாலை நிறைவடைந்தது. இந்த 10 நாள் திருவிழாவில் ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. ரூ.1 லட்சத்திற்கு மேல் புத்தகம் வாங்கிய வாசகர்களுக்கு கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பரிசுகளை வழங்கினார்.

News March 31, 2025

ராமநாதபுரம்: ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் பகிரவும்.

error: Content is protected !!