News February 10, 2026
திருவள்ளூர்: 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!

கடம்பத்தூர் போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் அரிபாபு. இவரது மகள் ஹேமதர்ஷினி(16). இவர், பேரம்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் வீட்டில் வேலை பார்க்க சொல்லி தாய் கண்டித்ததால், மனவேதனை அடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 11, 2026
திருவள்ளூரில் இளம்பெண் தற்கொலை!

ராஜாஜிபுரம். என்.ஜி.ஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் வீரக்குமார். இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி(31). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் ஏற்பட்ட தகராறால் மனவேதனை அடைந்த ராஜலட்சுமி, தன் அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.
News February 11, 2026
திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரம்!

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று(10.02.2026) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
News February 11, 2026
திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரம்!

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று(10.02.2026) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.


