News September 17, 2025
திருவள்ளூர்: வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு

திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில், வரும் 19ம் தேதி 25-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 17, 2025
திருவள்ளூர்: தலைகுப்புற கவிழ்ந்து டிராக்டர் விபத்து

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே பேட்டை அடுத்த பைவலசா கிராமத்தில் கல்லூரி வாகனம் பழுதாகி இருந்தது. இதனை டிராக்டர் மூலம் கட்டி இழுத்தனர். அவ்வாறு இழுக்கும் போது டிராக்டரில் கட்டி இருந்த கயிறு அறுந்ததால் டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் டிராக்டர் மட்டுமே தலைவியாக கவிழ்ந்தது.
News September 17, 2025
திருவள்ளூரில் மழை- மின்தடையா கவலை வேண்டாம்!

திருவள்ளூரில் மழை பெய்வதால், அடிக்கடி மின்வெட்டும் ஏற்படும். அவ்வாறு, முன்னறிவிப்பின்றி ஏற்படும் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் (9498794987) எண்ணை தொடர்வு கொள்ளவும். ஒருவேளை லைன் கிடைக்கவில்லை அல்லது பிசியாக இருந்தால், 9444371912 என்ற திருவள்ளூர் மாவட்ட வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ <
News September 17, 2025
திருவள்ளூர்: மூன்றாம் கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் முகாம்

மூன்றாம் கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 16.09.2025 முதல் 14.10.2025 வரை நகர்புறங்களில் 28 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 56 முகாம்களும் மொத்தம் 84 முகாம்கள் நடைபெற உள்ளது. மேலும் இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள எவரேனும் இருந்தால் முகாம் நடைபெறும் நாளன்று சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளித்து பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.