News August 27, 2025
திருவள்ளூர்: வி.சி.க பிரமுகர் மீது பாய்ந்த ‘குண்டாஸ்’

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள தனியார் துப்பாக்கித் தொழிற்சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்தநாளை கொண்டாட பணம் கேட்டு மிரட்டியதாக எழுந்த புகாரில், அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.கே. குமார் மணவாளநகர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவர் மீது ஆட்சியரின் பரிந்துரைப்படி குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
Similar News
News March 3, 2026
திருவள்ளூர் கலெக்டர் உத்தரவிட்டார்!

திருவள்ளூர்: காக்களூர் ஏரி பகுதியில் நேற்று(மார்ச்.2) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ’நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் ரூ.2.51 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், பணிகளை துரிதமாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்தரவிட்டார்.
News March 3, 2026
திருவள்ளூர் எம்.எல்.ஏ மீண்டும் விருப்ப மனு!

திமுக சார்பில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட விருப்ப மனு பெறபட்டு வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் தொகுதியில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அண்ணா அறிவாலயத்தில் நேற்று(மார்ச் 2) திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் நேரில் சென்று விருப்ப மனு அளித்தார். உடன் திருவள்ளூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News March 3, 2026
திருவள்ளூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை!

பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(57). இவர், பொன்னேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், 7 வயது பள்ளி மாணவிக்கு டிரைவர் பன்னீர் செல்வம் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாயார் செங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், பன்னீர்செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.


