News October 23, 2024
திருவள்ளூர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய செல்போன் மூலம் இயங்கக்கூடிய பம்புசெட் கட்டுப்படுத்தும் கருவி வேளாண் பொறியியல் துறை மூலம் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. சிறு, குறு, பெண் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 50 சதவீதம் மானியம், இதர பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமாக வழங்கப்பட உள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை தொடர்பு ஆட்சியர் வேண்டுகோள்
Similar News
News January 31, 2026
திருவள்ளூர்; ரயில்வேயில் 22,195 காலியிடங்கள்! APPLY

திருவள்ளூர் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் <
News January 31, 2026
திருவள்ளூரில் நாளை டாஸ்மாக் இயங்காது!

வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தையொட்டி, நாளை(பிப்.1) திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரதாப் அறிவித்துள்ளார். தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் செயல்படும் மதுபான சில்லறை கடைகள் மற்றும் உரிம ஸ்தலங்கள் மூடப்படும் என்றும், மீறி திறந்தால் பணியாளர்கள் மற்றும் உரிமைதாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News January 31, 2026
திருவள்ளூரில் இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

திருவள்ளூர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


