News November 23, 2025

திருவள்ளூர்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

வாடகை வீட்டில் வசிப்பவர்களா நீங்கள்? வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால் கவலைப்படாதீர்கள். உங்களின் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

Similar News

News February 15, 2026

கும்மிடிப்பூண்டியில் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி பகுதி ஏலாவூர் சோதனைச் சாவடியில் 30க்கும் மேற்பட்ட ஆட்கள் வாகனங்களை நிறுத்தி வாகனங்களை பரிசோதிக்கும் வேலையில் சுழற்சி முறையில் செய்து வருகின்றனர். இந்நிலையில், வேலையாட்களுக்கும் அதிகாரிகளுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் வேலையாட்கள் மீது ஆரம்பாக்கம் போலீஸிடம் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் பேரில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

News February 15, 2026

திருவள்ளூரில் பயங்கர தீ விபத்து!

image

கடம்பத்தூர் ஒன்றியம் புதுவள்ளூர் கிராமம், பால்வாடி தெருவைச் சேர்ந்தவர் விமலா(38). நேற்று முன் தினம் விமலா, வழக்கம் போல் தன்னுடைய வீட்டை பூட்டி விட்டு, வேலைக்கு சென்றார். அப்போது, அவரது வீட்டில் எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டது. இதனால், பயங்கர தீ பரவி, துணிமணிகல், சாமான்கள், சான்றிதழ்கள், ரூ.43 ஆயிரம் பணம் போன்றவை தீயில் எரிந்து நாசமானன. இதுகுறித்து மணவாளநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 15, 2026

திருவள்ளூர்: கணவன் கொடுமையால் இளம்பெண் தற்கொலை!

image

பெங்களூரைச் சேர்ந்தவர் மோகனஸ்ரீ(27). இவருக்கும் ஆர்.கே.பேட்டையைச் சேர்ந்த குணசேகரன்(35) என்பவருக்கும் கடந்த 2021-யில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆஷிகா(3) என்ற மகள் உள்ளார். இருவரும் பெங்களூரில் வசித்த நிலையில், அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மனைவியை பூட்டி வைப்பது, தலையணை வைத்து கொலை செய்ய முயற்சிப்பது என தொடர் கொடுமைகள் நடந்துள்ளன. இதனால், அச்சமடைந்த மோகனஸ்ரீ தற்கொலை செய்துகொண்டார்.

error: Content is protected !!