News January 28, 2026
திருவள்ளூர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திருவள்ளூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
Similar News
News January 31, 2026
திருவள்ளூர்: இங்கு சென்றால் திருமணம் நிச்சயம்!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., அரக்கோணம் செல்லும் வழியில் உள்ள திருப்பாச்சூர் தங்காதலி அம்மன் சமேத வசீஸ்வரர் கோயில் உள்ளது. வெகு நாட்களாக திருமணம் ஆகாதவர்கள், இங்குள்ள தங்காதலி தேவியை வழிபட்டால் தடை நீங்கி உடனே திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. காலை: 6:00 – 12:00, மாலை 4:00 – இரவு 8:00 மணி வரை நடை திறக்கும். கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து பஸ், ஷேர் ஆட்டோவில் இங்கு செல்லலாம்.( SHARE IT)
News January 31, 2026
திருவள்ளூரில் அதிரடி கைது!

மப்பேடு எறையாமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார்(37). இவர் நேற்று முன் தினம் திருவள்ளூர் தீயணைப்பு நிலையம் அருகே தனது மகனுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மதுபோதையில் இருந்த 3 பேர் விஜயகுமாரிடம் வழி கேடுள்ளனர். மேலும், வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், அவரைத் தாக்கினர். இந்நிலையில், ராஜேஷ்(19), சங்கர்(22), சந்துரு(20) ஆகியோரை திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்தனர்.
News January 31, 2026
ஆவடியில் அதிரடி கைது!

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்றப் பிரிவு போலீசாரால் கால்நடைத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணி ஆணையினை பெற்று கொடுத்து ரூ.14,49,000/- பண மோசடி செய்த வழக்கு நடைபெற்று வந்தது. இதில் தொடர்புடைய நாகராஜன் என்ற நபரை நேற்று(ஜன.30) போலீஸ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.


