News April 14, 2024
திருவள்ளூர்: ரயில் மோதி சிறுமி பலி

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 9ம் வகுப்பு மாணவி ரயில் மோதி உயிரிழந்தார். திருப்பத்தூரைச் சேர்ந்த அன்பழகனின் மகள் மகாலட்சுமி. விடுமுறைக்கு புட்லூரில் உள்ள தனது சித்தப்பாவின் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்றிரவு பழனி செல்வதற்காக ரயில் ஏற வந்த போது, தண்டவாளத்தைக் கடக்கையில் ரயில் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News December 25, 2025
திருவள்ளூரில் ட்ரெக்கிங் போக செம ஸ்பாட்

திருவள்ளூரில் ட்ரெக்கிங் பிரியர்களுக்கு ஏற்ற இடமாக குடியம் குகைகள் உள்ளது. வனத்துறை மூலம் அழைத்து செல்லப்படும் இந்த மலையேற்றம் மலையேற்றத்தோடு, தொல்லியல் சின்னங்களை பார்த்த அனுபவத்தை தரும். ஒருவருக்கு ரூ.849 வசூலிக்கப்படும் நிலையில்,<
News December 25, 2025
திருவள்ளூரில் இன்றைய ரோந்து காவலர்களின் விபரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (25.12.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
News December 25, 2025
குழந்தையை காப்பாற்ற முதல்வருக்கு கோரிக்கை

பொன்னேரி அண்ணாமலைச்சேரியைச் சேர்ந்தவர்கள் அர்ஜுன் (31) பூஜா 25) திருமணமாகி 3 1/2 வருடம் ஆகிய நிலையில் ருத்விகா (3 மாதம்) என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் கைகால் அசைவு இல்லாததால் மருத்துவர்கள்SMA எனப்படும் ஸ்பைனல் மஸ்குல்லர் அட்ரபி ஸ்டேஜ் 1 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை சரி செய்ய 16 கோடி ரூபாய் செலவாகும் ஆதலால் குழந்தையை காப்பாற்ற தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர்.


