News March 27, 2025
திருவள்ளூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை பதிவு

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இணைய மோசடிகாரர்கள் சமூக ஊடக கணக்குகளில் தள்ளுபடியில் IPL டிக்கெட்டுகள் வைத்திருப்பதாகக் கூறி, QR லிங்க் மூலம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்கிறார். எனவே தெரியாத இணைப்புகளை கிளிக் செய்யாதீர்கள். QR குறியீடுகள் மூலம் அவர்களுக்கு பணம் செலுத்த வேண்டாம் என எச்சரிக்கை பதிவு செய்துள்ளது.
Similar News
News April 2, 2025
திருவள்ளூரில் நூற்றாண்டு விழா போட்டிகள்

திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கபாடி, கையுந்துப்பந்து மற்றும் கால்பந்து போட்டிகள் 03.04.2025 முதல் 05.04.2025 வரை நடைபெற உள்ளது மேலும் விவரங்களுக்கு 7401703482, 8072908634 என்ற தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
News April 2, 2025
தீராத நோய்களைத் தீர்க்கும் வைத்திய வீரராகவர்!

திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வீரராகவப் பெருமாள் கோயில். வைத்திய வீரராகவர் என்ற பெயரில் பெருமாள் அழைக்கப்படுகிறார். இங்குள்ள ஹிருதாபநாசினி தீர்த்தத்தில் நீராடினால் எண்ணத்தால் உருவான பாவங்கள் மற்றும் தீராத நோய் தீர்க்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சிவபெருமான் தனது தோஷம் நீங்க இத்தல பெருமாளை வணங்கி தோஷம் நீங்கப் பெற்றதாக தல வரலாறு உள்ளது. ஷேர் பண்ணுங்க
News April 2, 2025
திருவள்ளூரில் நீட் எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 4 மையங்களில் இலவச நீட் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதன்படி, திருவள்ளூர், கடம்பத்தூர் -காக்கனூர் நடுநிலைப்பள்ளி, பூந்தமல்லி, வில்லிவாக்கம் -ஆவடி S.A பொறியியல் கல்லூரி, R.K பேட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு- அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம் கோஜன் பொறியியல் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.