News February 11, 2026
திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரம்!

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று(10.02.2026) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
Similar News
News February 14, 2026
திருவள்ளூரில் ரேஷன் கார்டு பிரச்னையா..?

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வட்ட வழங்கல் அலுவலகத்தில், இன்று(பிப்.14) நடைபெறும் மாதாந்திர குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் , நீக்கல் மற்றும் திருத்தம் சிறப்பு முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
News February 14, 2026
திருவள்ளூர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 14, 2026
திருவள்ளூரில் வீடு புகுந்த வன்முறை!

புட்லூர், ஏ.வி.எம் நகரைச் சேர்ந்தவர்சியாமளா(50) நேற்று(பிப்.13) மதியம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, மக்கள் தொகை எடுப்பதாகக் கூறி பவித்ரா(28) என்பவர் வீட்டிற்குள் நுழைந்தார். திடீரென சியாமளாவை கத்தியால் குத்திவிட்டு செயினை பறிக்க முயன்றார். ஆனால், சியாமளா தப்பித்து வெளியே வந்து, பவித்ராவை உள்ளே வைத்து பூட்டினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பவித்ராவை கைது செய்தனர்.


